கடந்த சில நாட்கள் எந்தளவுக்கு இருபதுக்கு20 போட்டிகள் எம்மவர் மனதை ஆக்கிரமித்துக் கொண்டதோ அதுக்குச் சமாந்தரமாக தமிழ்த் தேசியம் பற்றியும் விளையாட்டு அரசியல்கள் பற்றியதுமான விடயங்களும் எம்மவர்களை ஆக்கிரமிக்கத் தவறவில்லை..சூடான விவாதங்களும் சுவையான வார்த்தைப் பரிமாற்றங்களும் கணக்கின்றிக் காணப்பட்ட போதும் சில விடயங்கள் ரசிகர்கள் பலரின் மனங்களுக்கு முரண்பாடாகவே அமைந்திருந்தது..அவ்வாறான சில விடயங்களையும் என் நினைவலைகளையும் இங்கே பகிர்கிறேன்...
ஹலோ ப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்பிடி இருக்கீங்க கொஞ்ச நாளா வெட்டியா இருந்தாலும் பிஸியா தானுங்க இருந்தம் அதால தான் ஒண்டும் எழுத முடியல....அப்படா கொஞ்ச நாளா நிம்மதியா இருந்தம் மறுபடி வந்துட்டாண்டா எண்டு நீங்க மனசுக்குள்ள திட்டுறது விளங்குது.....என்ன செய்ய ப்ரெண்ட்ஸ் எதெண்டாலும் வதைக்க வேண்டியது என்ட கடமை...வாங்க வேண்டியது உங்க நிலைமை நம்மளுக்குள்ள ஏன் இந்த போர்மளிட்டி எல்லாம்....ரொம்ப நாளா நானும் ஏதாவது நல்ல விசயங்கள் எழுதுவம் நாமளும் ஏதோ கொஞ்சம் சமூக அக்கறையோட
இருக்கம் எண்டு காட்டிகுவம் எண்டு எழுதினா எல்லாரும் வந்து காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுறாங்க...அதான் மறுபடி அத விட்டிட்டு நம்ம ட்ரெண்டுகே எழுதுவம் எண்டு வந்திட்டம்....சரி சரி வாங்க அத விட்டிட்டு விசயத்தக் கவனிப்பம்...
இப்படிக்கு
யுத்தம் ஓய்ந்த நிலையில் சுற்றுலாத்துறை விருத்தி என்ற நடவடிக்கை யாழிலும் மேட்கொள்ளப்பட்டது அனைவரும் அறிந்ததே... கசோர்னா கடற்கரை கடற்கரை சாலைகள் போன்றனவும் இதற்காக திருத்தியமைக்கப் பட்டிருந்தன....இந்நிலையில் அங்கே வருகை தரும் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளின் பங்கும் யாழை நிலைகுலைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகின்றது... புதிதாய் இவர்களுக்காய் அமைக்கப்பட்ட ஆடம்பர விடுதிகள் கேளிக்கை நிலையங்கள் பிரயாணிகள் அற்ற சந்தர்ப்பங்களில் உள்ளூர் யாழ் மக்களை குறி வைத்தும் செயற்படுவதால் யாழின் இளம் சமூகம் பாரிய சவால் ஒன்றையே எதிர் நோக்குகின்றது... இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் உரிய கவனத்தை மேட்கொண்டார்களா மேற்கொண்டு வருகிறார்களா என்று தெரியவில்லை... மேலும் இவ்வாறு வருகை தரும் சிலர் வேண்டுமென்றே யாழின் கலாச்சாரத்தை எல்லாம் சீரழிக்கும் நோக்குடன் செயற்படுவது போல் செயற்படுவதாகவும் அங்கிருப்பவர்கள் சிலர் கூறுவதும் தெரிந்ததே...
இசையே மொழியாய்க் கலந்துறவாடி... இசையை களமாக்கி மகிழ்ந்துறவாடும் வரிசையில் நம்மவர் படால்களும் அவ்வப்போது தனி இடம் பெற்றுச் செல்லும் அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் எம்மவர்களால் வெளியிடப்பட்டுள்ள பாடல் ஒன்றைப்பற்றிய பார்வையே இந்த வலைப்பதிவு....
S.PRAKHASH....
இப்பிடி எல்லாம் பேசுறியே அப்புறம் என்னத்துக்கு விஜய் படம் பாக்க போறனி எண்டு சிலர் கேட்கலாம்.... அது ஒண்டும் பெரிய மேட்டர் இல்லீங்க இந்த வயசில காதல பற்றி கதைச்ச எவ்வளவு சந்தோசமா இருக்கும்...அத விட இப்பெல்லாம் விஜய் படம் பர்த்துற்று அத பற்றி கேவலமா கடிக்கும் போது வாற சுகமிருக்கே அத எல்லாம் எவ்வளவு சொன்னாலும் புரியாதுங்க... ஆனா ஒண்டு இப்ப கடைசியா ஏதோ 2 படம் அவரும் நல்லா கொடுக்க try பண்ணி இருக்காதா சொல்றங்க..... பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற விஜய் மாதிரி திறமையும் தன்னம்பிக்கையும் கொண்ட நடிகர்கள் ஏரளமானவங்க இப்ப போட்டிக்கு வந்திட்டதால விஜய் நின்று நிலைத்தது நடிப்பதற்கு சிறந்த படங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.....PRAKHASH.....
வாலிப வயோதிக நண்பர்களே அன்பர்களே நான் என் வாழ்க்கையில கேட்டு தெளிஞ்ச தெளியாத விசயங்களா வைச்சு உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்ல போறன்.... இத ஒரு காதல் கதை எண்டு வேற சொல்லலாம்..... காதல் கதை எண்டும் சொல்லலாம் எண்டோன்ன நான் வேற ஏதோவும் சொல்ல போறன் எண்டு நீங்க எதிர் பாக்கலாம் அதால காதல் கதையே சொல்ல போறன் எண்டு சொல்லிட்டேஎன் கதைய தொடக்குறன்....
இந்த கதைய சொல்லன்னுமேண்ட முதல் எங்க கம்பஸ பற்றி சொல்லணும்... எங்கே கம்பஸ் இருக்கே கம்பஸ்... அது எப்பிடி இருக்கும் தெரியுமா... சுத்தி பாக்கிறதுக்கு ஒரு நாள் போதாது... மரம் செடி கோடி என்ன கட்டிடங்கல்ட விசாலமென்ன ஏன் கம்பசுக்கு பின்னாடி பெரிய ஆறு வேற ஓடுது... அதோட மட்டுமா கம்பஸ்ல ஜூன் ஜூலை மாதங்கள்ள ஒரு மஞ்சள் பூ எல்லா இடமும் பூக்குமே அந்த சுகம் எப்பிடி இருக்கும் தெரியுமா.... வந்து பார்த்தவங்களுக்கு தெரிஞ்சுருக்கும்... நிறைய பேர் வந்திருக்க மாட்டங்க...பேரா பல்கலைல படிக்கிற ஒரு நண்பர கூட்டி வந்து 4 மணி நேரமா எங்க கம்பஸ திணறத் திணற சுத்திக் காட்டிய ஜாபகங்கள் இன்றும் உண்டு ... சரி சரி விசயத்துக்கு வருவம்... இப்படித்தான் பூத்துக் குலுங்கும் எங்க பல்கலை சாலைகளில் காதல் மழையில் நனைய நினைத்தவர் எத்தனையோ பேர்.....
இப்பிடி ஒரு கம்பசுக்குள்ள நானும் போனான்.... எத்தனையோ எதிர் பார்ப்புகள் கனவுகள்..... இவ்வளவு கூட்டமா போகும் போதே கன்டீனுக்குள்ள இத்தன அண்ணா அக்காமார் இருக்கினமே ஜோடிய இப்பிடி நெருக்கமா.... இல்லாத நேரம் எப்பிடி இருக்கும்... இப்பிடி எல்லாம் ஜோசிச்சுட்டு போயிற்று இருந்தான்... அப்பதான் பின்னாடி என் அருமை நண்பர் ஒருவரும் வந்திற்று இருந்தார்... நாங்களாவது அடிக்கடி galleface பக்கம் போகும் போது இதெல்லாம் பார்த்துருப்பம் ஆனா அவர் இப்ப தன் கொழும்புக்கு புதுசா வந்திருந்தார்...அவனடிச்ச லூட்டி இருக்கே நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் மச்சான் இதெல்லாம் இப்பிடி நேரடிய பாக்க கூடாதுடா கடைக்கன்னால பார்த்தும் பாக்காத மாதிரி பாகனுமேண்டு பயபுள்ள கேட்ட தானே... இது பத்தாதெண்டு ஒரு அஞ்சு வரிசை தள்ளி அவன்ட ஆள் வேற கம்பஸ் வார போற புதுசுல
தான் பையன் அவள பிடிச்சுருந்தான் அவளை பாகிறதும் காண்டீன பாகிறதும் என்கிட்ட நொய்யு நொய்யு எண்டுறதும் அவன்ட அளப்பற இருக்கே தாங்க ஏலாம போச்சு... எங்க கம்பஸ்ல வேற அழகான பொண்ணுங்க ஜாஸ்தியா நம்ம பசங்க எல்லாம் சைட் அடிக்கிறதில ரொம்ப ஆர்வமா இருந்தாங்க என் தலை எழுத்து இப்பிடியா அமையனும்.... எங்க ஊர்ல அப்பவே சொல்லுவாங்க புதுசா தண்ணி அடிக்கிறவன் கூட இருந்தாலும் புதுசா காதலிக்கிறவன் கூட சேரதடா எண்டு நான் கேட்டனா....
நான் மழை காலத்தில் தேடிய
பெண்ணவள் குடையாய் இன்று
என் அருகில்....
நான் மணக் கோலத்தில் தேடிய
பெண்ணவள் மனைவியாய் இன்று
எங்கோ தெருவில் .....
எத்தனை மாற்றங்கள்
கண்டோம்
அத்தனையும் கண்முன்னே
தூறல்களாய்பட்டுப் பூச்சி வாழ்கையல்ல
எட்டு நாளில் பட்டுவிட
மழைநின்ற பின்னும் நிற்காத தூவானமாய்
அவள் மடிதனை தேடுகிறேன்
கிடைத்தது அந் நங்கை அல்ல
ஈற்றில் அவள் தங்கை
வாய்த்த வரையில் லாபம்
மீண்டும் தூவானம் தூறத் தொடங்கிற்று..................
இப்படிக்கு ப்ரியமுடன்
Prakhash.............
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஒருகல் ஒரு கண்ணாடி திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் முழுவதுமாய் பூர்த்திசெய்யவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை... சிவா மனசில ஷக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற சிறந்த படங்களை தந்த இயக்குனர் ராஜேசிடம் இருந்து நிச்சயமாக ரசிகர்கள் இவ்வாறனதொரு படைப்பை எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.. அறிமுகநடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஓரளவு சொதப்புகிறார்..படத்தை இரு தூண்களாக படத்தை தாங்கி நிற்பது சந்தானத்தின் காமடியும் ஹரிஸ் ஜெயராஜின் இசையும் மட்டுமே... ஹன்சிக மேத்வணியை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்தில் வந்துபோகிறார்..உதயநிதி ஸ்டாலினின் அம்மாவாக வரும் சரண்யா மோகன் நடிப்பிலே ஜொலிக்கிறார்,சந்தனம் மற்றும் அவருடைய காதலியாக வருபவரினதும் கலாட்டாக்கள்













