//பல்கலை மேடையில் என் முதல் கவிதை இன்று வாணி விழாவில் 
வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள்....

சபைக்கோர் ஆசி வேண்டி முன்னிலை நிற்கிறேன்
சரஸ்வதி தாய் கண்ணயர்ந்திருக்கும் நேரம்
எட்டு நிமிடம் மட்டுமே சற்று வாட்ட அனுமதி
எட்டு நிமிடம் மட்டுமே கவிதை சொல்லி சற்று வாட்ட அனுமதி
வழமையின் நிமிர்த்தம் ஒரு வேண்டுகோள்
வேறொரு பெயரால் அனுமதியும் கூட 
கருத்துப் பிழை இருப்பின் கடலைகள் வீசாதீர்கள் வீசின்
கவிதை நேரங்கள் காரணமின்றி அதிகரிக்கப்படலாம் 
வேண்டுகோள் முடிந்தாயிற்று இனி விஷயம் அதற்கு வருவோம்

அன்றொருநாள் நடந்ததிது 
வரம் கேட்டு ரதிகள் ஆயிரமாய்ப் போகிறார்கள்
சிலரின் திரை பார்த்து ராமர்கள் திகைப்பாகிப் போகிறார்கள் 
அட்டும் குட்டுமாய் ஆயிரமாய்ப் போகிறார்கள்
இத்தனை மத்தியில் நானும் நுழைந்திட்டன்
பல்கலை கனவுகள் பலமாய் உறவாட

பறவைகள் இத்தனையாம் மொரட்டுவை மர நிழலில்
பட்டமரம் ஒன்று காட்டி நாண்பன் சொன்ன ஜாபகம் 
கோல்பேஸ் பக்கம் போகாத குழந்தைப்பயல்
வெட்டவெளிக் காட்ச்சிகள் கண்டு நீர் வடிக்கிறான்
கோல்பேஸ் பக்கம் போகாத குழந்தைப்பயல்
வெட்டவெளிக் காட்ச்சிகள் கண்டு வாநீர் வடிக்கிறான்
இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே
எண்ணியதும் ஒரு தருணமுண்டு

வாழ்க்கைப் பாதைகளில்
பலதுகள் வந்து கடந்து போகும்
சிலநேரம் சிலதுகள் தேங்கி நிற்கும்
இருபது வருட இளைய தலைவலி போல 
தாண்டியதும் தேங்கியதுமாய் எண்ணிப் பார்க்கிறேன்
வென்றது எதுவோ ஜாபகத்தில் தேம்பியதுதான்

ஒருகாலம் பாடசாலை தெரியாத அழகிய காலம்
பள்ளித்தொல்லையும் இல்லை 
இன்று போல் வல்லித் தொல்லையும் இல்லை
காலம் கடந்தபின் எண்ணிப் பார்க்கிறேன்

எத்தனை நாள் கட்டிலை தூக்கத்தில் கழுவிக் கொடுத்திருப்பேன்
எத்தனை நாள் சோற்றுப் பானைத் தண்ணீர் நானே இறைத்திருப்பேன் 
எத்தனை நாள் அடுத்த வீட்டு அக்காவை கட்டி அணைத்திருப்பேன்
சில நேரம் அவர்களே எனக்கு முத்தமும் தந்திருப்பார்கள் 
அப்பொழுதெல்லாம் என் செய்கைக்கு செல்லமே முத்தே எண்டவர்கள்
இன்று மட்டும் அவை எல்லாம் தவிர்ப்பதுதான் ஏனோ....
கள்ளமில்லா நெஞ்சுக்கு இன்னும் விளங்கவில்லை சரி
பிஞ்சு வயது ஜாபகங்கள் இது அது கடக்கட்டும்
கொஞ்சம் இனி அஞ்சு வயது ஜாபகங்கள்


முன்பள்ளி வகுப்பிலே அங்கு ஓர் தோழி
அப்பொழுதெல்லாம் தெரியாத்தனமாய் நானும் 
முன்வரிசை ராஜாவானேன்
குட்டு பாய் நீ எண்டு சொல்லி அடிக்கடி எண்ணத் தட்டி கொடுத்துக் கொள்வாள்
சுட்டி வயதில் கைபிடித்து நட்பாக திரிந்த நினைவுகள் இன்னும் நெஞ்சில் வரும்
மொட்டு மலர்ந்து பூவாகி காலம் பல கடந்த பின் பாதையில் ஒருநாள்
குட்டு பாய் எண்டவள் முகம் திருப்பிச் செல்கிறாள்
அப்பொழுது போல் இல்லை இப்பொழுது அவள்
மனம் தேத்திக் கொண்டேன் .

குட்டு இழந்தாயிற்று இனி கொஞ்சம் எட்டுவயது ஜாபகங்கள்
யாழ்கடந்து கொழும்பிலே புதிதாய் வசித்த ஜாபகங்கள்
கோல்பேஸ் எல்லாம் அவ்வளவாய் தெரியாது
வெள்ளவத்தைக் கடற்கரை தான்
சிறுபிள்ளை தனே அப்பொழுதும்
கொழும்பு வேறு புதிது 
அப்பா கைபிடித்துப் போன ஜாபகங்கள்
இப்பொழுது போல் இல்லை கடற்கரையில் ஜோடிகள் அன்று
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
எங்கேயாவது ஒன்று
அதுவும் திரை மறைவில்
மறந்துவிட்டேன் கடற்கரை அல்லவா 
திருத்தம் மர மறைவில்

சிலநேரம் உற்றுப் பார்ப்பேன்
என்னப்பா செய்கிறார்கள்
அப்பாவிடம் கேட்டதும் உண்டு
"நீச்சல் கத்துக்க வந்திருக்காங்க போலடா"
இப்படித்தான் பதில் உரைத்தார்
இப்படியா நீச்சல் கற்றுக் கொள்வது
மனம் ஜோசித்தது
அன்றொருநாள் ஜேம்ஸ் போண்ட படத்திலும் இதுதானே வந்தது
அங்கே கடற்கரை இருக்கவில்லையே
ஏதோ ஏமாத்துகிறார் சரி விட்டுவிடுவம்
கேட்பதை விட்டுவிட்டேன் பார்ப்பதை மறக்கவில்லை

எட்டும் கழிந்து வருடம் ஐந்தானது
அத்தனை போயும் இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை
காலம் கடந்தபின் இண்டேநேத்காபே
அறிவுப்பசிக்கு விடை தேடி ஒருநாள் 
நானும் நண்பனுமாய்
உள்ளே நுழைகையிலே ஒருத்தன் சொன்னான்
பிஞ்சிலே பளுத்ததுகள்
கணக்கின்றி நுழைந்தோம்
ஒருவழியாக விளக்கமும் கிடைத்தாகிற்று
கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டிய விடயங்கள்
பலர் காணமல் மறைத்துக் கற்பிக்கிறார்கள்
ஒலி ஒளித் தொழில்நுட்பத்தோடு 
அறிவுத்தாகம் அதிகரிக்க அடிக்கடி சென்று கற்றுக் கொண்டோம்
சில நேரம் நான் தனிமையிலும் கற்றுக்கொண்டேன் 
இப்படிக் கழிந்தது எனது பதின்மூன்று


இன்னும் இரண்டு போக விட்டு பதினைந்து வந்தது
மறக்கமுடியாத தருணங்கள் அவை
வெள்ளவத்தைத் தெருக்களில் கண்தேடும் தொகைகள் குறைவு
ராமனின் தொண்டன் மட்டும் இருந்திருந்து ஒன்றுரெண்டு கூட வருவான்
கூடவே சீன் போட்டுக் காட்டியும் தருவான்
ஒண்டும் புரியாத பயல்களாய்
இன்று கம்பஸில் lecturesஇல் முழிப்பது போல அன்றும் முழித்திருக்கிறேன்
ஏதோ காலம் செல்லச் செல்ல மேதுமேதுவாய்க் கற்றுக் கொண்டேன்
இப்படிக் கழிந்தது அழகிய பதினைந்து

பதினெட்டில் பொதுவாய் என்று சொல்வதட்க்கில்லை
முற்றும் கற்ற மாமுனிகளாய் நம்மைப் போல் எத்தனையோ கூட்டணிகள்
நண்பனின் காதலுக்காய் கூடச் சுற்றிய நினைவுகள் மட்டும்
நெஞ்சிலே அடிக்கடி அசைந்து போகும்
அருத்துசா வீதியில் மொத்தம் முன்னூற்று மூன்று வீடுகள்
சந்தேகம் இருந்தால் எண்ணிப் பாருங்கள்

காலங்கள் இப்படி எல்லாம் கடந்தது
நாளேடு எல்லாம் நல்லாய்ப் படித்து முடித்து பல்கலை வந்தோம் 
மேலும் நாலு வருடம் கடந்தபின்
என்ன ஒரு வன்கொடுமை
நம்மில் இருக்கும் சிலர் பற்றி அடுத்த வரிகள் சொல்கிறேன் 
இங்கே வந்து நாளேட்டுக்கு விளக்கம் கேட்கிறான் ஒருவன்
நமீதா யாரென்கிறான் இன்னொருவன்
நாலைந்து கோர்ஸ் முடித்து நல்லா வந்திருக்கிறாயா என்றால்
ஐந்தாவதாய் ஜாவா கோர்ஸ் படிக்கிறேன் என்கிறான் மற்றுமொருவன்
கருவறை முதல் அல்லல்ப்பட்டு அவதிப்பட்டு நான் கற்றவைகள் எல்லாம் என்னாயிற்று
இங்கே பயன்படாமல் போய்விடுமோ
கவலைப்பட்டு கடற்கரை அழைத்துச் சென்றால் கண்ணை மூடிக் கொள்கிறான் இன்னொருவன்

யாரிளைத்த குற்றம் இது
சமூகத்தின் பால் பிரல்பட்ட நினைவைக் கொண்டுவிட்டு நம்மைக் குற்றம் சொல்கிறார்கள்
திரைப்படத்தில் நீல ஆடை அணிந்த கதாநாயகி கண்டால் கூட எழுந்து ஓடி விடுகிறார்ககள்
காலங்கள் மாறலாம் சிம்ரன் திரிஷா சமந்தா இளைஜர் தம்  கனவுகளை மாற்றலாம் 
கல்லறை வரை இது போன்ற மனிதர்கள் மாறவே போவதில்லையோ


வேதனையுடன் பொறுமையைக் கவி கேட்டோருக்கு நன்றி சொல்லி 
மீண்டும் வருவேனெண்டு எண்ணத்துடன் விடை பெறுகிறேன் 




இப்படிக்கு
ப்ரியமுடன்
Prakhash

கடந்த சில நாட்கள் எந்தளவுக்கு இருபதுக்கு20 போட்டிகள் எம்மவர் மனதை ஆக்கிரமித்துக் கொண்டதோ அதுக்குச் சமாந்தரமாக தமிழ்த் தேசியம் பற்றியும் விளையாட்டு அரசியல்கள் பற்றியதுமான விடயங்களும் எம்மவர்களை ஆக்கிரமிக்கத் தவறவில்லை..சூடான விவாதங்களும் சுவையான வார்த்தைப் பரிமாற்றங்களும் கணக்கின்றிக் காணப்பட்ட போதும் சில விடயங்கள் ரசிகர்கள் பலரின் மனங்களுக்கு முரண்பாடாகவே அமைந்திருந்தது..அவ்வாறான சில விடயங்களையும் என் நினைவலைகளையும் இங்கே பகிர்கிறேன்...

இலங்கையைப் பொறுத்தவரை சமூகத்தில் பெரும்பான்மையானவர்களிடம் காணப்படும் ஒரு நிலைப்பாடு போட்டிகளில் பெரும்பான்மை சிங்கள மக்கள் இலங்கை அணிக்கும்  தமிழர்களில்  பாதிக்கு மேல் இந்திய அணிக்கும் அதே போல் முஸ்லிம் இனமக்கள் பாகிஸ்தான் அணிக்கும் என்ற ரீதியிலேயே தங்களுடைய ஆதரவை வழங்குகின்றனர் என்று...இது ஒரு வேளை உண்மையாக கூட இருக்கலாம்...ஆனால்  இந்த நிலைப்பாட்டுக்கு கூறும் நொண்டிச் சாக்குகளைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை....தமிழர்களில் இந்திய அணியை ஆதரிப்பவர்கள் கூறும் கருத்து எம் இனப்பிரச்சனை..அதுமட்டுமின்றி இவ்வாறானவர்கள் இலங்கை அணியை நேசிக்கும் எம்மவர்களை இனத் துரோகிகளாகவும் சித்தரிக்க முயல்வதுதான்  கவலைக்குரியது....உண்மையில் சொல்லப் போனால் இனப் என்ற ரீதியில் என்னைப் பொறுத்தவரை இனமென்ற ரீதியில் அரசின் குறிப்பிட்ட ஒரு சமூகம் எமக்கு அநியாயம் இழைத்தது உண்மைதான்...ஆனால் இந்தியாவோ எம்மை இனமாக வஞ்சித்திருக்கிறதே.....எதிரியை வெறுப்பவர்களாயின்  ஏன் துரோகியை தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும்...இந்த மனதின் நிலைப்பாடுதான் எனக்கு புரியவில்லை...இது சம்பந்தமாக பதியவர் அண்ணா ஒருவர் உரைத்திருந்த கருத்துக்களையும் இங்கே பகிர்கிறேன்...




/*இந்திய ஆதரவு மனப்பான்மை என்பது இந்திரா காந்தி காலத்திலிருந்து ஆரம்பித்திருக்கலாம். அது, தமிழர் போராட்டங்கள் தோற்றம் பெற்ற போதும் ஏதோவொரு ஆதரவு மனப்பான்மையின் வழி ஊடுகடத்தப்பட்டிருக்கிறது. அது, இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு -கிழக்கில் ருத்ர தாண்டவமாடிய போதிலும் அவ்வளவாக மாறவில்லை. அது ஏன் என்று இன்னமும் புரியவில்லை. ராஜிவ் காந்தி காலத்திற்குப் பின்னரும் இந்தியா எங்களை வைத்து ஆயிரம் அரசியல் நாடகங்கள் ஆடிவிட்டது. எங்களின் மூச்சுக்குழாயைப் பிடித்து முள்ளிவாய்க்காலுக்குள் தள்ளுவதற்கு துணை நின்ற போதும் கூட இந்தியாவை “இந்திரா காந்தியின் கால நல்லெண்ணத்துடன்“ அணுகியவர்கள் இங்கு இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் கூறுகின்ற தேசிய வாதத்தை தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இலங்கை கிரிக்கட் அணியின் தோல்வியை கொண்டாடுவதற்கு அவர்கள் முன்வைக்கிற தேசியம் பற்றிய புரிதல் மிகவும் சிறுபின்ளைத்தனமானது. இந்திய கிரிக்கட் அணியை கொண்டாடுவதற்கு என்ன காரணத்தை வேண்டுமானாலும் முன்வையுங்கள் அது எனக்கு பிரச்சினையும் இல்லை. ஆனால், ‘தமிழ்த் தேசிய ஆதரவு’ என்கிற மொண்ணைத்தன காரணங்களை அடுக்காதீர்கள். இது, நாங்கள் வேண்டி நிற்கிற கழிவிரக்க மனநிலையில் வெளிப்பாடு மட்டுமே.*/

உண்மையில் இனப்பிரச்சனை குறித்து சிந்தித்து ஒரு அணிக்கு ஆதரவு வழங்குபவர்கலாயின் நிச்சயம் இந்திய அணிக்கு தம ஆதரவை வழங்கக் கூடாது என்பதே என் வாதம்...அடுத்தாதாக இன்னுமொரு விடயம்..இத்தனை ஆண்டுகளாக என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் நாமும் ஒரு சமூகமாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்நாட்டின் வளங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்....எல்லாவற்றையும் இங்கேயே இருந்து அனுபவித்துவிட்டு இந்த நாட்டுக்காக விளையாடுபவர்களை நேசிப்பவர்களை இனத் துரோகிகளாக சித்தரிக்க முயல்கிறார்கள் என்றால் அவர்கள் நாம் என்ன பெயர்கொண்டு அழைப்பது....ஒரு வேளை உணவிட்டவனைக் கூட வாழ்நாள் முழுதும் நன்றியைப்பர்க்கும் சமூகம் எனப் ஒருகாலம் போற்றப்பட்ட சமூகம் அல்லவா எம் தமிழ்ச் சமூகம்...இன்று நாம் ஏன் இன்று அந்த நன்றி மறந்து நிற்கிறோம் இங்கே....இரு சமூகத்தில் குறிப்பிட்ட சிலர் செய்த தவறுக்காக மொத்தமாக தமிழ்ச் சமூகத்தை இலங்கை நாட்டிலிருந்து வேறொரு பாகமாக பிரித்துக் கையாள முயட்ச்சிப்பதன் உட்கிடக்கைதான் என்ன...அங்கேயும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் எம்மைப்புரிந்து கொண்ட எமக்காக விவாதிப்பவர்கள் ....அவர்களையாவது நாம் நட்பாக பார்க்கிறோமா...

அடுத்ததாக இன்னொரு விடயத்தைப் பார்ப்போம்...சிலர் கூறும் காரணம் திறமையின் நிமிர்த்தம் ஆதரவு அளிக்கிறோம் எண்டு சரி ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம்...ஆனால் நீங்கள் ஆதரவு அளிக்கும் அணி தவிர்ந்த ஏனைய குழுக்கள் ஏதும் எம் அணியுடன் விளையாடும் போது அந்த அணி வெற்றிபெற வேண்டும் என்று எம் இலங்கை அணியை தாழ்த்தும் விதமாக நடந்து கொள்வது ஏன்....இந்த இடத்தில் துரோகம் இழைப்பது யார்....

உரிமை என்ற ரீதியில் ஆண்டுகள் பல போரடிவிட்டோம் தோற்றும் விட்டோம்...இப்பொழுது இருப்பதெல்லாம் பொதுவான உரிமைகளை பெற்றுக்கொண்டு எம்சமூகத்தை நிலை நிறுத்துவது தான்....இப்பொழுது எங்காவது ஒரு உரிமைக்காக ஒரு போராட்டம் நடைபெறுகின்றது என வைத்துக் கொள்வோம் அங்கே ஆயிரம் சகோதர இன முகங்களுடன் எங்காவது ஒன்று ரெண்டு தமிழ் முகம் காணக்கிடைக்கும்...சில நாட்களின் முன்பு கல்விசார் ஊழியர் போராட்டத்தின் போதும் நான் கண்கூடாக கண்டதொன்று...அங்கே எம் சகோதர இன மக்கள் எமக்காகவும் போராடுகிறார்கள் அவர்களை பெற்றுத்தரப் போகும் உரிமைகளை நாமும் அனுபவிக்கப் போகிறோம்..இதுபற்றி எல்லாம் சிந்திப்பவர்கள் எத்தனை பேர்....இவ்வாறெல்லாம் எம் தேசத்தின் வளங்களையும் அடுத்தவன் பெற்றுத்தரும் உரிமைகளையும் அனுபவித்து விட்டு அதற்கெதிராக நாம் வேறு என்பது போல் நடந்துகொள்வது எவ்விதம் நியாயமாகும் ...எம் பொது உரிமைகளுக்காக வராத பலர் தாம் இங்கே இன உரிமைகளைப் பற்றிக் கதைத்தபடி ஏளனமாக இல்லை...இது பல இடங்களின் கண்கூடு...

நிச்சயாமாக ஒன்று மட்டும் ஏற்றுக்கொள்கிறேன் நாட்டுப்பற்றுக்கும் ஆதரவளித்தளுக்கும் அணிக்கும் சம்பந்தமில்லை தான்....ஆனால் உண்மையாகவே இந்த நாட்டை நேசிப்பவர்கலாயின் சிந்தித்துப் பாருங்கள்..நீங்கள் வேறு ஒரு அணிக்கு ஆதரவு வழங்குகிறீர்கள்..அந்த அணியுடன் எம் அணி விளையாடி ஒரு இக்காட்டன நிலையில் விலாயாடிக்கொண்டிருக்கிறது அப்போது நிச்சயம் உங்கள் மனம் சொல்லும்.."நம்மவர் ஜெயிக்கக் கூடாதா  என்று"....அப்பொழுது நீங்களே உணர்வீர்கள் உங்கள் நாட்டுப்பற்றை...

இது எல்லாம் தவிர வேறு சில எம் பிரச்சனைகள் சம்பத்தமாக ஆதியும் அறியாத  அந்தமும் அறியாத தமிழ்நாட்டிலிருந்துகொண்டு சிலதுகள் அறிக்கைகள் விடும்....இலங்கை தோற்றால் அது இலங்கைத் தமிழர்களின் வெற்றியாம்....மத்திய அரசு தமிழ் நாட்டை இப்பொழுதெல்லாம் கணக்கெடுப்பதே இல்லை...முதலில் நீங்கள் தனியாக வருவதற்கு முயற்சி செய்யுங்கள் அப்புறம் அடுத்தவர்களைத் தூண்டி விடலாம்....தாங்கள் மட்டும் நாட்டுடனே இருக்க வேண்டும் கேட்டால் இந்தியர்கள் அப்பிடீன்னா நாங்க மட்டும் என்ன இளிச்சவாய்களா....இப்படி எல்லாம் பேசிய பிறகும் இதை வாசித்துவிட்டு சிலதுகள் நிச்சயம் நையாண்டி செய்யும் ஏளனப்படுத்தும் அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை....நாமும் உண்மையான தமிழர்கள் தான்...எம் இனத்தை நேசிக்கிறோம்...எம்மால் ஏதாவது செய்ய முடியாமல் போனாலும் ஒவ்வொரு தமிழனின் கவலையின் போதும் எம் கண்களும் நிச்சயம் கலங்குமையா....

#சில மனிதர்களால் சமூகமாய் வஞ்சிக்கப்பட்டலும் என் நாடு எனக்கு தந்தது ஏராளம்.....வஞ்சித்தது மனிதர்களே.....

இப்படிக்கு
ப்ரியமுடன்
S.PRAKHASH....

என் வலைப்பூவில்...

ஜாபகங்கள் அனுபவங்கள் கனவுகள் கனவுகளின் விதைகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும்....என்னுள் இருப்பவற்றின் சில தேடல்களும் என் கனவுகளும் இங்கே....அதைத்தாண்டி பார்த்துக் கேட்டு ரசித்தவற்றில் பிடித்தவற்றை மட்டுமல்ல வெறுத்தவைகளையும் சில நேரம் இங்கே பகிர்கிறேன்....உங்களையும் சிலது நினைவூட்டட்டும்...
Powered by Blogger.

Followers