(இளைய தளபதி விஜய் பற்றி தேவையான அளவு நண்பர்கள் ஏற்கனவே கழுவிக் கழுவி ஊத்தி விட்டதால் இந்த பதிப்பின் நோக்கம் அவரை மேலும் கழுவி ஊத்துவதோ..இல்லை அவரின் பீலதாளன்களை பறைசாட்டுவதோ அல்ல.. அத்துடன் நான் விஜயின் ரசிகனுமல்ல எதிரியும் அல்ல என்பதை முன்னமே குறிப்பிட்டு கொள்றேன்....)

நான் இண்டைக்கு ஒண்டும் எழுதுற idealaye இருக்கலைங்க ஆனா என்ன மட்டும் ஏன் இப்படி பிளான் பண்ணி தாக்குறாங்க எண்டு தெரியல காலை நடந்த ஒரு விசயதிட வெளிப்பாடு தான் இந்த மனக் குமுறல்.....இல்லாட்டி பாவம் தானும்தண்ட பாடும் எண்டுமற்றவங்கள பேய்க்காட்டிக் கொண்டிருக்கிற அந்த பிள்ளைய பற்றி நான் ஏன் கதைக்க போறன்....
இண்டைக்கு தலைவர்ட புறந்த நாளாம்.... நண்பன் ஒருத்தன் போன் பண்ணினான்.... அடிச்சு பிடிச்சு எழும்பி யாரடா மச்சான் என்டன்....நம்ம இளைய தளபதி விஜய்ட தாண்ட எண்டான்.... போடா ம****** இன்னும் விடியவே இல்ல தூக்கத்த கெடுத்துட்டியே எண்டு கத்தாத குறையா ஏசிற்று வச்சன்....ஏன் இந்த கொலைவெறி என்ன மட்டும் எல்லாரும் பிளான் பண்ணி தாக்குறாங்க....இழிச்சவாயன் எண்டு எங்கயாவது எழுதி ஒட்டி இருக்கோ ... சரி  அதவிட்டிட்டு விசயத்துக்கு வருவம்...
விஜயி என்டா ஏன் இந்த கடுப்பு ஏன் இந்த வெறுப்பு எல்லார் போலயும் விஜய் படம் பிடிக்காம எனக்கு அவங்க தல மேல வெறுப்பு வரலைங்க....வழமையா நம்ம பசங்க எல்லாம் விஜய் படம் பர்த்துற்று அவன கழுவிக் கழுவி ஊத்துவாங்களே.... அதில இருந்தே கொஞ்சம் கொஞ்சமா விஜய் எண்டாலே ஏதோ தீண்டத் தகாத பண்டம் மாதிரியே நினைப்பு வந்திடுச்சு.... ஒருகாலத்தில துள்ளத மனமும் துள்ளும், பூவே உனக்காக போல சில நல்ல படங்கள் நடிச்ச போது நானும் அந்த விஜய்க்கு ஒரு ரசிகனா இல்லாட்டியும் பார்வையாளன தான் இருந்தான்... ஆனா காலம் போன கோலம் விஜய்ட படம் போன கேவலம் எல்லார்ட மனசிலையும் வெறுப்ப உண்டாக்க அவங்க ரசனையின் வெளிப்பாடுகள் என்லையும் நிறைய தாக்கம் செலுத்திடுச்சு.....

அத விட மேலதிகமா ஒரு விஷயம் இருக்கு இந்த விஜய்ட ரசிகர்கள் விஜய்ட ரசிகர்கள் எண்டு சொல்லிக்கிட்டு இருக்காங்களே அவங்க பண்ற அளப்பர இருக்கே தாங்க முடியல.....இந்தியால தான் ஏதோ படம் வந்த விஜய் படத்துக்கு பாலபிசேகம் செய்வங்கலம் கேவலமா.... ஆனா இன்னும் ஜாபகமிருக்கு நல்லா அழகிய தமிழ் மகன் எண்டு ஒரு படம் எடுத்தாங்களே அது எப்படி வந்திச்செண்டேல்லாம் ஏற்கனவே சொல்லியாச்சு நிறைய பதிவுகளள.... அண்டைக்கு முதல் முதலா அப்பிடி ஒரு சம்பவத்தை ரொக்ஸ்சி திரை அரங்கில பாக்கிற பாவம் எனக்கும் கிடைச்சுச்சு.... இப்பிடித்தான் பக்கம் பக்கம் பக்கமா status போடுறது... அவர் தலைய கிளறினா கிளரிகிறது இப்பிடி இவங்க செய்த அளப்பரைகளே என்னைப் போன்ற பலரை இவ்வாறு வெறுப்புக்கொள்ள வைச்சுடுச்சு....

இப்பிடி எல்லாம் பேசுறியே அப்புறம் என்னத்துக்கு விஜய் படம் பாக்க போறனி எண்டு சிலர் கேட்கலாம்.... அது ஒண்டும் பெரிய மேட்டர் இல்லீங்க இந்த வயசில காதல பற்றி கதைச்ச எவ்வளவு சந்தோசமா இருக்கும்...அத விட இப்பெல்லாம் விஜய் படம் பர்த்துற்று அத பற்றி கேவலமா கடிக்கும் போது வாற சுகமிருக்கே அத எல்லாம் எவ்வளவு சொன்னாலும் புரியாதுங்க... ஆனா ஒண்டு இப்ப கடைசியா ஏதோ 2 படம் அவரும் நல்லா கொடுக்க try பண்ணி இருக்காதா சொல்றங்க..... பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற விஜய் மாதிரி திறமையும் தன்னம்பிக்கையும் கொண்ட நடிகர்கள் ஏரளமானவங்க இப்ப போட்டிக்கு வந்திட்டதால விஜய் நின்று நிலைத்தது நடிப்பதற்கு சிறந்த படங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.....

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் அவர்களே....

மீண்டும் சந்திக்கலாம்
இப்படிக்கு
ப்ரியமுடன்
PRAKHASH.....

0 comments :

Post a Comment

என் வலைப்பூவில்...

ஜாபகங்கள் அனுபவங்கள் கனவுகள் கனவுகளின் விதைகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும்....என்னுள் இருப்பவற்றின் சில தேடல்களும் என் கனவுகளும் இங்கே....அதைத்தாண்டி பார்த்துக் கேட்டு ரசித்தவற்றில் பிடித்தவற்றை மட்டுமல்ல வெறுத்தவைகளையும் சில நேரம் இங்கே பகிர்கிறேன்....உங்களையும் சிலது நினைவூட்டட்டும்...
Powered by Blogger.

Followers