//பல்கலை மேடையில் என் முதல் கவிதை இன்று வாணி விழாவில் 
வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகள்....

சபைக்கோர் ஆசி வேண்டி முன்னிலை நிற்கிறேன்
சரஸ்வதி தாய் கண்ணயர்ந்திருக்கும் நேரம்
எட்டு நிமிடம் மட்டுமே சற்று வாட்ட அனுமதி
எட்டு நிமிடம் மட்டுமே கவிதை சொல்லி சற்று வாட்ட அனுமதி
வழமையின் நிமிர்த்தம் ஒரு வேண்டுகோள்
வேறொரு பெயரால் அனுமதியும் கூட 
கருத்துப் பிழை இருப்பின் கடலைகள் வீசாதீர்கள் வீசின்
கவிதை நேரங்கள் காரணமின்றி அதிகரிக்கப்படலாம் 
வேண்டுகோள் முடிந்தாயிற்று இனி விஷயம் அதற்கு வருவோம்

அன்றொருநாள் நடந்ததிது 
வரம் கேட்டு ரதிகள் ஆயிரமாய்ப் போகிறார்கள்
சிலரின் திரை பார்த்து ராமர்கள் திகைப்பாகிப் போகிறார்கள் 
அட்டும் குட்டுமாய் ஆயிரமாய்ப் போகிறார்கள்
இத்தனை மத்தியில் நானும் நுழைந்திட்டன்
பல்கலை கனவுகள் பலமாய் உறவாட

பறவைகள் இத்தனையாம் மொரட்டுவை மர நிழலில்
பட்டமரம் ஒன்று காட்டி நாண்பன் சொன்ன ஜாபகம் 
கோல்பேஸ் பக்கம் போகாத குழந்தைப்பயல்
வெட்டவெளிக் காட்ச்சிகள் கண்டு நீர் வடிக்கிறான்
கோல்பேஸ் பக்கம் போகாத குழந்தைப்பயல்
வெட்டவெளிக் காட்ச்சிகள் கண்டு வாநீர் வடிக்கிறான்
இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே
எண்ணியதும் ஒரு தருணமுண்டு

வாழ்க்கைப் பாதைகளில்
பலதுகள் வந்து கடந்து போகும்
சிலநேரம் சிலதுகள் தேங்கி நிற்கும்
இருபது வருட இளைய தலைவலி போல 
தாண்டியதும் தேங்கியதுமாய் எண்ணிப் பார்க்கிறேன்
வென்றது எதுவோ ஜாபகத்தில் தேம்பியதுதான்

ஒருகாலம் பாடசாலை தெரியாத அழகிய காலம்
பள்ளித்தொல்லையும் இல்லை 
இன்று போல் வல்லித் தொல்லையும் இல்லை
காலம் கடந்தபின் எண்ணிப் பார்க்கிறேன்

எத்தனை நாள் கட்டிலை தூக்கத்தில் கழுவிக் கொடுத்திருப்பேன்
எத்தனை நாள் சோற்றுப் பானைத் தண்ணீர் நானே இறைத்திருப்பேன் 
எத்தனை நாள் அடுத்த வீட்டு அக்காவை கட்டி அணைத்திருப்பேன்
சில நேரம் அவர்களே எனக்கு முத்தமும் தந்திருப்பார்கள் 
அப்பொழுதெல்லாம் என் செய்கைக்கு செல்லமே முத்தே எண்டவர்கள்
இன்று மட்டும் அவை எல்லாம் தவிர்ப்பதுதான் ஏனோ....
கள்ளமில்லா நெஞ்சுக்கு இன்னும் விளங்கவில்லை சரி
பிஞ்சு வயது ஜாபகங்கள் இது அது கடக்கட்டும்
கொஞ்சம் இனி அஞ்சு வயது ஜாபகங்கள்


முன்பள்ளி வகுப்பிலே அங்கு ஓர் தோழி
அப்பொழுதெல்லாம் தெரியாத்தனமாய் நானும் 
முன்வரிசை ராஜாவானேன்
குட்டு பாய் நீ எண்டு சொல்லி அடிக்கடி எண்ணத் தட்டி கொடுத்துக் கொள்வாள்
சுட்டி வயதில் கைபிடித்து நட்பாக திரிந்த நினைவுகள் இன்னும் நெஞ்சில் வரும்
மொட்டு மலர்ந்து பூவாகி காலம் பல கடந்த பின் பாதையில் ஒருநாள்
குட்டு பாய் எண்டவள் முகம் திருப்பிச் செல்கிறாள்
அப்பொழுது போல் இல்லை இப்பொழுது அவள்
மனம் தேத்திக் கொண்டேன் .

குட்டு இழந்தாயிற்று இனி கொஞ்சம் எட்டுவயது ஜாபகங்கள்
யாழ்கடந்து கொழும்பிலே புதிதாய் வசித்த ஜாபகங்கள்
கோல்பேஸ் எல்லாம் அவ்வளவாய் தெரியாது
வெள்ளவத்தைக் கடற்கரை தான்
சிறுபிள்ளை தனே அப்பொழுதும்
கொழும்பு வேறு புதிது 
அப்பா கைபிடித்துப் போன ஜாபகங்கள்
இப்பொழுது போல் இல்லை கடற்கரையில் ஜோடிகள் அன்று
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
எங்கேயாவது ஒன்று
அதுவும் திரை மறைவில்
மறந்துவிட்டேன் கடற்கரை அல்லவா 
திருத்தம் மர மறைவில்

சிலநேரம் உற்றுப் பார்ப்பேன்
என்னப்பா செய்கிறார்கள்
அப்பாவிடம் கேட்டதும் உண்டு
"நீச்சல் கத்துக்க வந்திருக்காங்க போலடா"
இப்படித்தான் பதில் உரைத்தார்
இப்படியா நீச்சல் கற்றுக் கொள்வது
மனம் ஜோசித்தது
அன்றொருநாள் ஜேம்ஸ் போண்ட படத்திலும் இதுதானே வந்தது
அங்கே கடற்கரை இருக்கவில்லையே
ஏதோ ஏமாத்துகிறார் சரி விட்டுவிடுவம்
கேட்பதை விட்டுவிட்டேன் பார்ப்பதை மறக்கவில்லை

எட்டும் கழிந்து வருடம் ஐந்தானது
அத்தனை போயும் இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை
காலம் கடந்தபின் இண்டேநேத்காபே
அறிவுப்பசிக்கு விடை தேடி ஒருநாள் 
நானும் நண்பனுமாய்
உள்ளே நுழைகையிலே ஒருத்தன் சொன்னான்
பிஞ்சிலே பளுத்ததுகள்
கணக்கின்றி நுழைந்தோம்
ஒருவழியாக விளக்கமும் கிடைத்தாகிற்று
கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டிய விடயங்கள்
பலர் காணமல் மறைத்துக் கற்பிக்கிறார்கள்
ஒலி ஒளித் தொழில்நுட்பத்தோடு 
அறிவுத்தாகம் அதிகரிக்க அடிக்கடி சென்று கற்றுக் கொண்டோம்
சில நேரம் நான் தனிமையிலும் கற்றுக்கொண்டேன் 
இப்படிக் கழிந்தது எனது பதின்மூன்று


இன்னும் இரண்டு போக விட்டு பதினைந்து வந்தது
மறக்கமுடியாத தருணங்கள் அவை
வெள்ளவத்தைத் தெருக்களில் கண்தேடும் தொகைகள் குறைவு
ராமனின் தொண்டன் மட்டும் இருந்திருந்து ஒன்றுரெண்டு கூட வருவான்
கூடவே சீன் போட்டுக் காட்டியும் தருவான்
ஒண்டும் புரியாத பயல்களாய்
இன்று கம்பஸில் lecturesஇல் முழிப்பது போல அன்றும் முழித்திருக்கிறேன்
ஏதோ காலம் செல்லச் செல்ல மேதுமேதுவாய்க் கற்றுக் கொண்டேன்
இப்படிக் கழிந்தது அழகிய பதினைந்து

பதினெட்டில் பொதுவாய் என்று சொல்வதட்க்கில்லை
முற்றும் கற்ற மாமுனிகளாய் நம்மைப் போல் எத்தனையோ கூட்டணிகள்
நண்பனின் காதலுக்காய் கூடச் சுற்றிய நினைவுகள் மட்டும்
நெஞ்சிலே அடிக்கடி அசைந்து போகும்
அருத்துசா வீதியில் மொத்தம் முன்னூற்று மூன்று வீடுகள்
சந்தேகம் இருந்தால் எண்ணிப் பாருங்கள்

காலங்கள் இப்படி எல்லாம் கடந்தது
நாளேடு எல்லாம் நல்லாய்ப் படித்து முடித்து பல்கலை வந்தோம் 
மேலும் நாலு வருடம் கடந்தபின்
என்ன ஒரு வன்கொடுமை
நம்மில் இருக்கும் சிலர் பற்றி அடுத்த வரிகள் சொல்கிறேன் 
இங்கே வந்து நாளேட்டுக்கு விளக்கம் கேட்கிறான் ஒருவன்
நமீதா யாரென்கிறான் இன்னொருவன்
நாலைந்து கோர்ஸ் முடித்து நல்லா வந்திருக்கிறாயா என்றால்
ஐந்தாவதாய் ஜாவா கோர்ஸ் படிக்கிறேன் என்கிறான் மற்றுமொருவன்
கருவறை முதல் அல்லல்ப்பட்டு அவதிப்பட்டு நான் கற்றவைகள் எல்லாம் என்னாயிற்று
இங்கே பயன்படாமல் போய்விடுமோ
கவலைப்பட்டு கடற்கரை அழைத்துச் சென்றால் கண்ணை மூடிக் கொள்கிறான் இன்னொருவன்

யாரிளைத்த குற்றம் இது
சமூகத்தின் பால் பிரல்பட்ட நினைவைக் கொண்டுவிட்டு நம்மைக் குற்றம் சொல்கிறார்கள்
திரைப்படத்தில் நீல ஆடை அணிந்த கதாநாயகி கண்டால் கூட எழுந்து ஓடி விடுகிறார்ககள்
காலங்கள் மாறலாம் சிம்ரன் திரிஷா சமந்தா இளைஜர் தம்  கனவுகளை மாற்றலாம் 
கல்லறை வரை இது போன்ற மனிதர்கள் மாறவே போவதில்லையோ


வேதனையுடன் பொறுமையைக் கவி கேட்டோருக்கு நன்றி சொல்லி 
மீண்டும் வருவேனெண்டு எண்ணத்துடன் விடை பெறுகிறேன் 




இப்படிக்கு
ப்ரியமுடன்
Prakhash

1 comments :

அருமை நண்பா.

Post a Comment

என் வலைப்பூவில்...

ஜாபகங்கள் அனுபவங்கள் கனவுகள் கனவுகளின் விதைகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும்....என்னுள் இருப்பவற்றின் சில தேடல்களும் என் கனவுகளும் இங்கே....அதைத்தாண்டி பார்த்துக் கேட்டு ரசித்தவற்றில் பிடித்தவற்றை மட்டுமல்ல வெறுத்தவைகளையும் சில நேரம் இங்கே பகிர்கிறேன்....உங்களையும் சிலது நினைவூட்டட்டும்...
Powered by Blogger.

Followers