அன்று நான் சாலையில் உன்னைப்பார்த்தது
நெஞ்சம்தான் காதலில் இன்று ஏங்குது -அன்பே
அன்று நான் சாலையில் உன்னைப்பார்த்தது
நெஞ்சம்தான் காதலில் இன்று ஏங்குது

கடலில் ஒரு துளி
நினைவில் ஒருதுளி
ஏனோ எந்தன் நெஞ்சில் வலி
காதல் ஒரு வலி
தேடல் ஒருவலி
நீதானே எந்தன் காதல் தோழி 

காதலித்த நெஞ்சம் அடியன்பே 
காணவில்லை கொஞ்சம் அதுயிங்கே
சகியே நீதான் கண்டு கொண்டுசென்றயோ 

நீயில்லாத உலகம் அது காற்றில்லாத நரகம்அடி
எந்தன் நெஞ்சில் தீயை மூட்டி குளிர் கைகின்றாய் அன்பே
நான் விடும் மூச்சில் கொஞ்சம் நீ குளிர்கின்றாய் 

(கடலில் ஒரு துளி.......)

ஏதோ மனதிலே ராகம் வளருதே
காதல் என்றுதான் நானும் சொல்லவா
ஏனோ என்நிழல் தேடல் கண்டது
உந்தன் துணை தான் அதுவும் நோக்குதா.....

அடி மலரின் வாசனை அது மாறிப் போகலாம்
மனதின் நேசம்தான் அது மாறிப் போகுமா 
என்னிலே என்னிலே நீதான் பௌர்ணமி 
கெஞ்சினான் கேட்கிறேன் மெல்லத் தேயாதே..................

( கடலில் ஒரு துளி.......)



ப்ரியமுடன் 
Prakhash......





0 comments :

Post a Comment

என் வலைப்பூவில்...

ஜாபகங்கள் அனுபவங்கள் கனவுகள் கனவுகளின் விதைகள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும்....என்னுள் இருப்பவற்றின் சில தேடல்களும் என் கனவுகளும் இங்கே....அதைத்தாண்டி பார்த்துக் கேட்டு ரசித்தவற்றில் பிடித்தவற்றை மட்டுமல்ல வெறுத்தவைகளையும் சில நேரம் இங்கே பகிர்கிறேன்....உங்களையும் சிலது நினைவூட்டட்டும்...
Powered by Blogger.

Followers